பள்ளி ஆசிரியரை தொடர்ந்து பயிற்சியாளர் கைது.!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகளப்பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியரை தொடர்ந்து பயிற்சியாளர் கைது.!!

சென்னையில் கடந்த சில நாட்களாக கல்வி நிறுவனங்கள்,பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட  இடங்களிலிருந்து மாணவிகள் பலர் பாலியல் புகாரை அளித்து வருகின்றனர். 


ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதன்பிறகு சேத்துப்பட்டு,ஆர் ஏ புரம்,செனாய் நகர்,பூக்கடை உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரக்கூடிய பள்ளி, பயிற்சி மைய மாணவிகள் புகார் அளித்து வந்தனர்.


இதுமட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட மாணவிகள் வாட்ஸ் ஆப் மூலமாகவும் பாலியல் புகார் அளித்து வருகின்றனர்..

அதில் தடகள பயிற்சிக்காக செல்லும் போது பயிற்சியாளர் நாகராஜன் பயிற்சி கொடுப்பதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிகள் நாகராஜனின் பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காமல் போனால் பயிற்சியை நிறுத்திவிடுவது வழக்கம் நடைபெற்றுள்ளது.


ஏதேனும் பிரச்சனை செய்தால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் வந்துள்ளார். இதுமட்டுமின்றி வேறு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் அந்த பெண் குறித்து தவறான கருத்துகளை பரப்பி வந்ததாக பயிற்சியாளர் நாகராஜன் மீது புகார் அளித்திருந்தார்.

இதனால் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனிடையே அதிர்ச்சியில் பயிற்சியாளர் நாகராஜன் தூக்கு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று பயிற்சியாளர் நாகராஜனை பூக்கடை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.