கோவை பள்ளி மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்...

கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்...

 கோவையில் ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தநிலையில் மாணவி மரணம் வேதனை அளிப்பதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் போக்சோ சட்டம் குறித்து  மக்கள் அறிந்திருந்தும்,  பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என  குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவர்களை காக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு கட்டாயமாக இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டிய பொறுப்பும் பெற்றோருக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வைகோ மாணவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இருவர் குறித்து காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.