தனியார் நர்சிங் கல்லூரி மாணவியுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் கைது!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில்  ஆபாசமாக பேசிய விவகாரத்தில்  கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தனியார் நர்சிங் கல்லூரி மாணவியுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் கைது!

அருப்புக்கோட்டையில் எலக்ட்ரோ ஹோமியோபதி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி  ஆபாசமாக பேசிய வீடியோ மற்றும் ஆபாச சாட்டிங் பதிவு  சக மாணவிகளின் வாட்சப் குழுவில் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சமரசம் செய்ய வந்த போலீசாருடன் மாணவிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதனை தொடர்ந்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தங்கள் எதிர்காலம் குறித்தும் தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும் கல்லூரி மாணவிகள் பெற்றோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். 

மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்ததால்  மதுரை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.