ஆம்புலன்சில் விட்டுச்சென்ற  பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர் !!

ஸ்ரீபெரும்புதூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை மீட்டு விபத்துக்குள்ளானவரின் உறவினர் இடத்தில் ஒப்படைத்தனர்.

ஆம்புலன்சில் விட்டுச்சென்ற  பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர் !!

வினோத் வயது 26 உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று பொங்கல் விடுமுறைக்காக தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபொழுது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த ஒரகடம் 108 ஆம்புலன்ஸ் வினோத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோத்திடம் இருந்த ஐந்து லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போன் உட்பட அவரிடமிருந்த பொருட்களை அவசரகால ஓட்டுனர் ஹரி விக்னேஷ், அவசர கால மருத்துவ உதவியாளர் சதீஷ் ஆகியோர் வினோத்தின் உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இந்த செயல் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களிடத்திலும்  பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.