திருச்சியில் 3 லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தப்படும் -ஓபிஎஸ்...!!

திருச்சியில் 3 லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தப்படும் -ஓபிஎஸ்...!!

திருச்சியில் 3 லட்சம் தொண்டர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், திருச்சியில்  3 லட்சம் தொண்டா்களை கூட்டி மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவோம் என குறிப்பிட்டார். 

மேலும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அவர் மாநாடு  தொடா்பாக முக்கிய தலைவர்களுக்கு விரைவில் அழைப்பு விடுக்க உள்ளதாகவும்  தொிவித்துள்ளாா்.

முன்னதாக, அதிமுக வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த அவரை அதிமுக பொதுக்குழு கட்சியை விட்டு வெளியேற்றியதும் அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளர் ஆனதும் குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிக்க: பிரிந்து சென்ற தலைவர்கள்..! பின்னடைவில் பாஜக...! பெங்களூரு தேர்தலில் இனி நிலை என்ன?