ஒரு சிறு பணியை கூட செய்ய தயாா் இல்லாத நாம்...எவ்வாறு ஆட்சியை கைப்பற்றி நடத்த போகிறோம்?

காங்கிரஸ் கட்சியின் வலிமையான கொள்கையை பின்பற்றி அனைவரும் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தினார். 

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது பேசிய அவா்,  இந்தியாவில் சமூக நீதியை கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என பெருமிதம் தொிவித்தாா்.  

இதையும் படிக்க : 1- 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

மேலும் ஒரு சிறு பணியை கூட செய்ய தயாா் இல்லாத நாம் எவ்வாறு ஆட்சியை கைப்பற்றி நடத்த போகிறோம் என கேள்வி எழுப்பினாா்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், நமக்கு எல்லாம் வேண்டும் ஆனால் வாக்குச்சாவடி மட்டும் அமைக்க மாட்டோம்! தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குச்சாவடி வைத்துள்ளோமா? என மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்.