எல்ஐசி, எஸ்பிஐ வங்கிகள் முன்பு காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!

எல்ஐசி, எஸ்பிஐ வங்கிகள் முன்பு காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!

சென்னையில் உள்ள எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

எல்ஐசி மற்றும் எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததாக வெளியான அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. 

இதையும் படிக்க : துருக்கி நிலநடுக்கத்திற்கு... ஜோதிட சாஸ்திரத்தை சொன்ன காயத்ரி ரகுராம்...!

அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் எஸ்சி, எஸ்டி மாநில செயலாளர் ரஞ்சன் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல், மத்திய அரசை கண்டித்து, தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், அடையாறு பகுதியில் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று மத்திய அரசுக்கு எதிராக சென்னையின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.