ஒரே பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா... திருப்பூரில் பள்ளி மூடப்பட்டது...

திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து நெசவாளர் காலனி பள்ளியை 3 நாட்கள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. 

ஒரே பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா... திருப்பூரில் பள்ளி மூடப்பட்டது...

திருப்பூர் நெசவாளர் காலனி பகுதி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதில் 41 வயது தமிழாசிரியர் மற்றும் 36 வயது ஆங்கில ஆசிரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும் திருப்பூர் குளத்துப்பாளையம் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 வயது ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  
இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தாக 5 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நெசவாளர் காலனி பள்ளியை 3 நாட்கள் மூடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.