தமிழகத்தில் இன்று புதிதாக 1,432 பேருக்கு கொரோனா உறுதி.....

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இன்று புதிதாக 1,432 பேருக்கு கொரோனா உறுதி.....

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று புதிதாக ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும்  ஆயிரத்து 519 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,20,499 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு  35 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு 16 ஆயிரத்து 637 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 176 பேரும், கோவையில் 149 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.