தமிழகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா உறுதி

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் ஆயிரத்து 436 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரு நாளில் 15 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  35 ஆயிரத்து 783ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 171 பேரும், கோவையில் 132 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.