ஒரே பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று : தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள்!!

சென்னை எருக்கஞ்சேரி பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று : தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள்!!

சென்னை எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி மறைமலை அடிகள் தெருவில் உள்ள செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் பிளஸ் டூ வரை இரு மாணவி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். 

இந்த நிலையில் கொரோணா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. இதனையடுத்து பொதுத்தேர்வு எழுதும் 10.11.12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் பள்ளி நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சென் ஜோசப்  மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12ல் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனையடுத்து நேற்று முன்தினம் மண்டலம் 4 சுகாதாரத் துறை சார்பில் 10.ஆம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 60 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், அதில் 27 மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மண்டலம் 4 சுகாதாரத்துறை சார்பில் அந்த பள்ளியில் நோய் தொற்று கண்டெடுக்கப்பட்ட மாணவர்களை சுகாதாரத்துறை சார்பில் தனிமைப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை வைத்து அந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.