தற்போது குறைய தொடங்கிய கொரோனா தொற்று... புதிதாக 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 612இல் இருந்து ஆயிரத்து 597 ஆக குறைந்துள்ளது.

தற்போது குறைய தொடங்கிய கொரோனா தொற்று... புதிதாக 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு ஆயிரத்து 597 ஆக குறைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 623 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26 லட்சத்து 12 ஆயிரத்து 684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 99 ஆக உள்ளது.

அதேசமயம், கொரோனாவால் மேலும் 25 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் ஏற்கனவே 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 190 ஆக அதிகரித்துள்ளது.