தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பாடுஇல்லை.. சென்னையில்?

கொரோனா பாதிப்பு குறையும் என்று எண்ணினால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பாடுஇல்லை.. சென்னையில்?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, கொரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், புதிதாக ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்பு ஆயிரத்து 484இல் இருந்து ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 711 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்து 970இல் இருந்து 10 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 764 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.