கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 44 பேருக்கு மட்டுமே பாதிப்பு.. உயிரிழப்பு இல்லை!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 50க்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 44 பேருக்கு மட்டுமே பாதிப்பு.. உயிரிழப்பு இல்லை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 44  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று ஒரே நாளில் 74 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 004 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநிலம் முழுவதும் 505 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.