கலைஞர் நினைவு நாள் அமைதிப்பேரணியில் கவுன்சிலர் மறைவு; அமைச்சர் அஞ்சலி.

கலைஞர் நினைவு நாள் அமைதிப்பேரணியில்  கவுன்சிலர் மறைவு;  அமைச்சர் அஞ்சலி.

மாரடைப்பால் உயிரழந்த திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 -வது  நினைவு தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு அமைதிப் பேரணியாக சென்றனர்.

இப்பேரணியில் சென்னை மாநகராட்சி 146 வது மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகமும் கலந்துகொண்டு பேரணியில் சென்றார் அப்போது  மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்  உயிரிழப்பு...!

அவரது உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது ”எனக்கு யாருப்பா இருக்கா எழுந்திருப்பா”, என கூறி கதறி அழுத கவுன்சிலரின் மகனுக்கு அவரது குடும்பத்தினருக்கும் அமைச்சர் சுப்பிரமணியன் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அமைதி பேரணிக்கு சென்ற திமுக கவுன்சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும்  படிக்க  |  திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர் உயிரிழப்பு...!