மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3  ஆயிரம் கோடி கடன் உதவி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்...

திருத்தணியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்குகிறார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3  ஆயிரம் கோடி கடன் உதவி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  வழங்குகிறார்...

தமிழ்நாட்டில் இதுவரை 7 லட்சத்து 25 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தற்போது மேலும் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.