கொஞ்சம் ஓவரா தான் போரோமோ? போவோம்! - போதை ஆசாமியின் அலப்பறை!

பிறந்தது பெண் குழந்தை என்பதை மறைத்து ஆண் குழந்தை பிறந்ததாக மருத்துவமனையில் அலம்பல் செய்த போதை தந்தையை எச்சரித்த காவல் துறை.

கொஞ்சம் ஓவரா தான் போரோமோ? போவோம்! - போதை ஆசாமியின் அலப்பறை!

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த ஸ்ரீதர். இவரது மனைவி அம்பிகா (வயது 28). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்பிகாவை ஸ்ரீதர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் படிக்க | ‘யார பாத்து ஜோடியோட வர சொன்ன?' - போதை ஆசாமிகளால் நடந்த தகராறு

அங்கு அம்பிகாவுக்கு இன்று காலை 11 மணி அளவில் அழகான குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை செவிலியர்கள், ஸ்ரீதரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து ஸ்ரீதர் குழந்தையை செவிலியர்களிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் மாலை ஸ்ரீதர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அம்பிகாவின் அருகில் பெண் குழந்தை இருந்தது. இதை பார்த்த ஸ்ரீதர், நமக்கு ஆண் குழந்தை தான் பிறந்ததாக கூறி முதலில் குழந்தையை தன்னிடம் காண்பித்ததாகவும், இது நமது குழந்தை இல்லை என்றும், ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாகவும் கூறி அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க | கஞ்சா போதையில் ஏ.டி.எம் கல்லாவில் கை வைத்த ஆசாமிகள்!!!

பின்னர் அவர் மறியலில் ஈடுபடுவதற்காக சாலைக்கு வந்தார். இதுபற்றி அறிந்து வந்த புதுநகர் போலீசார், அவரை சமாதானப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீதருக்கு பிறந்தது பெண் குழந்தை தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் ஸ்ரீதர், தனக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது என ஏன் மாற்றி கூறினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.   போலீஸார் விசாரணையில் காலையில் பெண் குழந்தை பிறந்ததாக ஸ்ரீதர் இடம் தெரிவித்த பிறகு அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | நிம்மதியா குடிக்க கூட வழியில்லை, போதை ஏறவில்லை - ராஜேந்திர பாலாஜி..!

தனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆர்வத்தில் இருந்த ஸ்ரீதர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆண் குழந்தை பிறந்து விட்டதாக கூறி புதுவை மாநிலம் சென்று மது அருந்திவிட்டு மாலையில் வந்து தன்னுடைய குழந்தையை மாற்றி விட்டதாக கூறி அலம்பலில் ஈடுபட்டதை கண்டுபிடித்த போலீசார் ஸ்ரீதரை கடுமையாக எச்சரித்து பின்னர் விடுவித்தனர்.