நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு... முதலுதவி அளித்த வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்...

நாய் கடித்து மூர்ச்சையான குரங்குக்கு முதலுதவி அளித்து மீட்ட வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு... முதலுதவி அளித்த வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்...

பெரம்பலுார் அருகே நாய் கடித்ததால் மூர்ச்சையாகி உயிருக்கு போராடிய குரங்கை, வாலிபர் வாயோடு வாய் வைத்து ஊதி, மூச்சு கொடுத்து காப்பாற்றிய சம்பவம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குரங்கு இருந்ததை உணர்ந்த பிரபு, குரங்கை தரையில் கிடத்தி, அதன் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி விட்டார்.

ஆனாலும், எவ்வித அசைவும் ஏற்படாததால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தமது வாயை வைத்து ஊதினார். இதனை தொடர்ந்து மூச்சு விட துவங்கிய குரங்கு, கண் விழித்து பார்த்தது. இந்த வீடியோ வைரலான நிலையில், குரங்கின் உயிரை காப்பாற்றிய வாலிபர் பிரபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.