என்ன மனுஷன்யா..! டீக்கடையில் சிகரெட் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை சொன்ன டிஜிபி சைலேந்திரபாபு...இணையத்தில் வைரல்!!

என்ன மனுஷன்யா..! டீக்கடையில் சிகரெட் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை சொன்ன டிஜிபி சைலேந்திரபாபு...இணையத்தில் வைரல்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கிராமத்து தேநீர்க்கடையில், புகை பிடித்துக் கொண்டிருந்தவருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுரை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அலுவல் நிமித்தமாக சத்தியமங்கலம் சென்றிருந்த சைலேந்திர பாபு, காலையில் உடற்பயிற்சி முடித்த பின்னர் சின்னட்டிபாளையம் கிராமத்தில் உள்ள தேநீர்க்கடைக்குச் சென்றார். அங்கு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்ட அவர், இது போன்ற இயற்கையான பழங்கள் சென்னையில் கிடைப்பதில்லை என்றார்.

அப்போது அருகில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்த நபரிடம் புகை பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடு குறித்து விளக்கிய அவர்  பசும்பால் குடித்து உடல் நலனைப் பேண அறிவுறுத்தினார். இந்த வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.