அதிகாரிகள், காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு..! விடுமுறை அளிக்க உத்தரவு..!

அதிகாரிகள், காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு..!   விடுமுறை அளிக்க  உத்தரவு..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது குருபூஜை விழா இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேவர் குருபூஜை விழாவிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தற்போது, விழா முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் தேவர் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக டிஜிபி காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையின் பணி சிறப்பாக இருந்ததாகவும் பசும்பொன் மட்டுமே தமிழக முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் வரக்கூடிய காலங்களில் வார விடுமுறையில் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரே நேரத்தில் விடுமுறை அளிக்க முடியாத பட்சத்தில் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் கூடுதல் ஒரு நாள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க   | நவம்பர் 3-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..! தமிழக அரசு புதிய கோரிக்கை..!