திமுக எம்.பி. வீட்டில் ரெய்டு: ரூ.400 கோடி போலி ரசீது பறிமுதல் ..!

திமுக எம்.பி. வீட்டில் ரெய்டு:   ரூ.400 கோடி போலி ரசீது பறிமுதல் ..!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் ரொக்கம் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் மற்றும் 28 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என மொத்தம் 60 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இடைத்தரகர்களிடம் இருந்து மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட 25 கோடிக்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  |  “திரைத்துறை திமுகவிற்கு செழிப்பாக உள்ளது” - வானதி சீனிவாசன்