”யாரை பார்த்தும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” - உதயநிதி

”யாரை பார்த்தும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” - உதயநிதி

கர்நாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை முதலமைச்சர் பெற்றுத் தருவார் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி சங்கம் ஹோட்டலுக்கு  வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செந்தில் பாலாஜி கைதுக்கு பின் திமுக அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு யாரைப் பார்த்தும் தாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறினார். 

இதையும் படிக்க : நாளை முதல் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு...!

தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரிலிருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர்  உதயநிதி, கர்நாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை முதலமைச்சர் பெற்றுத் தருவார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.