தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக - முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக - முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக என மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைபட கூறியுள்ளார்.

மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா கோவையில் இன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மாலையில் விசைத்தறி, கைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வந்தார். விமான நிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மகாலுக்கு சென்றார். விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள் நின்று கொண்டு உற்சாகமாக வரவேற்றனர். 

இதையும் படிக்க : ’ஜெயிலர்’: முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ...இணையத்தில் வைரல்!

பின்னர் விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 6 ஆயிரம் பேர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக என பெருமைபட கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிகாக இன்றே பணியை தொடங்க வேண்டும் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.