"திமுக ஒரு கட்டுப்பாடு இல்லாத கட்சி ...! இந்த அரசு எப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டும்...?" - கே.பி. முனுசாமி.

நாங்கள் யார் யாரிடம் விலகி நிற்க வேண்டுமோ அங்கு விலகி நிற்போம். யாருடன் பயணிக்க வேண்டுமோ அங்கு பயணிப்போம்....!

"திமுக ஒரு கட்டுப்பாடு இல்லாத கட்சி ...! இந்த அரசு எப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டும்...?"  -  கே.பி. முனுசாமி.

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  பல ஆண்டுகளாக அடிமைகளாய் இருந்தும்  பல நூறு தொழிலாளர்கள் போராட்டத்தால் உயிரிழந்தும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறைச்சென்றும் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 12 மணி நேரம் வேலையாக அறிவித்தது தொழிலாளர்களுக்கு அவர் செய்த துரோகம் என்று  சாடினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,  "பல கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இது போன்ற வேலைகளில்  ஈடுபட்டு வருவதாகவும், ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டில் ஓராண்டில் ஆறில் ஒரு பங்கை ஸ்டாலினின் மகனும் மருமகனும் சம்பாதித்துள்ளதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதனை கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த அரசு எப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்...? ",  எனவும்,  அவர்களுக்கு தாங்கள் குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும், முரசொலி மாறன் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும் போட்டிப்போட்டிக் கொண்டு பணத்தை மட்டும் சம்பாதிப்பதாக குறிக்கோளுடன் இருக்கின்றனர் எனவும் கூறினார். 

அதோடு, ஸ்டாலின் குடும்பம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும், இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை எனவும்,  மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை எனவும்  அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும், திமுக ஒரு கட்டுப்பாடு இல்லாத கட்சி என்றும் திமுகவில் இப்போது போட்டி நிலவி வருவதாகவும்  அவர் தெரிவித்தார். தொடர்ந்து பாஜக -வை தென்னிந்தியாவில் காலூன்ற வைத்ததே  ஜெயலலிதா தான் எனவும், நாட்டை ஆளும் திறமையான மோடியே தங்களின் பிரதம வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழக மக்களுக்கு தேவையான நிதியை தவறாமல் பெற மக்களுக்காக பிரதமரிடம் நிற்கிறோம் எனவும், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை  கொண்டு வந்தவர்  எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் ஆனால் மு.க. ஸ்டாலின்  முதல்வரானவுடன் மூத்த நிர்வாகிகளுக்கு பதவி வழங்காமல் மகனை அமைச்சராக்கியவர் மு.க. ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டார். அதோடு, அவருக்கு முன்மொழிய மூத்த நிர்வாகிகளை அடிமைகளாக பயன்படுத்துகிறார் எனவும் விமர்சித்தார். 

இதையும்  படிக்க    ]  சொன்ன திட்டங்கள் மட்டும் அல்ல;சொல்லாத பல திட்டங்களையும் தீட்டியுள்ளோம் - முதலமைச்சர் பதில்!

மேலும்,  தமிழகத்தில் தன்னந்தனியாக வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி அதிமுக, 2-வது இடத்தில் திமுக உள்ளது என்றும், அதனாலே அவர்கள் சிறு சிறு கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு வாக்கு பெறுகின்றனர் எனவும், ஆனால் தாங்கள் யார் யாரிடம் விலகி நிற்க வேண்டுமோ அங்கு விலகி நிற்போம். யாருடன் பயணிக்க வேண்டுமோ அங்கு பயணிப்போம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சில உறுப்பினர்கள்  திமுகவில் இருந்து  விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து 100 பேருக்கு தையல் இயந்திரங்கள், 100 பேருக்கு சலவைப் பெட்டிகள், வழங்கப்பட்டன.இந்த விழாவில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளீர் அணியினர் கலந்து கொண்டனர் .

இதையும்  படிக்க    ]  ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய... வேளாண் இடுபொருட்கள் ஏரியில் கொட்டப்பட்ட அவலம்...!