உதயநிதி தலைக்கு 10 கோடி விதித்த சாமியார் உருவ பொம்மையை எரித்த திமுக-வினர்...!

உதயநிதி தலைக்கு 10 கோடி விதித்த சாமியார் உருவ பொம்மையை எரித்த திமுக-வினர்...!

உத்தரப்பிரதேச சாமியார் பரமஹம்சரின் உருவ பொம்மையை  எரித்து, திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, கொரோனாவை போல் ஒழித்து காட்ட வேண்டும் என பேசியிருந்தார். 

இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்றைய தினம், உத்திரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டோவை கிழித்து, அவரது தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

இதையும் படிக்க : ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் சர்ச்சை...!

சாமியாரின் இந்த அறிவிப்புக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தன் தாத்தாவுமான கருணாநிதி பாணியில் கிண்டலாக பதிலடி கொடுத்தார். என் தலைக்கு 10 கோடியா? வெறும் 10 ரூபாய் சீப்பு இருந்தா நானே சீவிப்பேன் என்று கிண்டலாக பேசியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பத்து கோடி ரூபாய் அறிவித்த உத்தரப்பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்து, கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஊர்வலமாக சென்று, சாமியாரின் உருவ பொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.