”குழந்தையின் கையை அகற்றியது தான் திமுகவின் சாதனை”.! - சீமான் விமர்சனம். 

”குழந்தையின் கையை அகற்றியது தான்  திமுகவின் சாதனை”.! - சீமான் விமர்சனம். 

தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கனிம வளம் கடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சிகிச்சைக்கு வந்த குழந்தையின் கையை அகற்றியது தான் திமுக அரசின் சாதனை என்று சீமான் சாடினார்.

தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக போடி வருகை தந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் 

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்;-

வரப் போகும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இருக்குமா?,. விஜய்க்கு ஆதரவு கொடுப்பீர்களா? என்ற செய்தியாளரின்  கேள்விக்கு: 

”நான் அரசியலுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது எனது கொள்கை வேறு என் வழி தனி வழி. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். என் தலைவர் பிரபாகரனை நான் ஏற்றுக் கொண்டதைப் போல் விஜய் ஏற்பாரா மற்ற அரசியல் கட்சியினர் ஏற்பார்களா?, விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவேன்; அது உங்களுக்கு நகைச்சுவையாக தான் இருக்கும்; அதை அவர்கள் ஏற்பார்களா?. என் பாதை தனி; பயணம் தனி; இலட்சியம் தனி; கொள்கை தனி. இதில் மற்றவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு சண்டையிட மாட்டேன் நான் தனித்து சண்டையிடுவேன்”.  என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசுகையில்,..  “ ஒரு ஆட்சியின் சாதனை என்பது அரசு பள்ளியில் தேர்ச்சி அதிகளவிலான மருத்துவர்கள் ஆட்சியாளர்கள் வெளி வருகிறார்கள், பொது மக்களுக்கு சிறந்த மருத்துவம் வழங்குதல் உள்ளிட்டவைகளில் இருக்கலாம்;  இங்கு என்ன நடக்குது என்றால் மருத்துவத்திற்கு வந்த சிறு பிள்ளையின் கையை வெட்டி விட்டீர்கள். இந்த அளவு தான் உங்கள் சாதனை இருக்கிறது. இதைப் பார்க்காமல் டாஸ்மாக்கில் 45 ஆயிரம் கோடியிலிருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டம் தீட்டுவது,  குடி பழக்கம் உள்ளவர்களை அதிகரிக்க தான் செய்கிறீர்கள்.இதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும்?. குண்டு போட்டு கொல்வது மட்டும்  இனப்படுகொலை என்று சொல்ல முடியாது குடிக்க வச்சுக் கொள்வதும் இனப்படுகொலை தான். மதுவை தெருதோறும் திறந்துவிட்டு தெருவுக்கு இரண்டு படித்தவன் இருப்பதை விட்டுவிட்டு இரண்டு கடைகளை திறந்து வைத்துவிட்டு இளைஞர் நலன் விளையாட்டு துறையா?,..  இது அனைத்தும் வெட்டிப் பேச்சு. இங்கு எப்படி இளைஞர் நலன் இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திலிருந்து கேரளா கர்நாடகா பகுதிகளுக்கு கனிம வளம் கடத்தப்படுகிறது. அங்கு உள்ள மலைகளை அவர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு அழிக்கப்படும் கனிம வளங்களால் கட்டப்படும் கட்டடங்கள் வருங்கால சங்கதிர்களின் வீடாக இருக்காது அவர்களின் சமாதியாக தான் இருக்கும்.

அழிக்கப்படும் ஒவ்வொரு மலைகளிலும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் நாம் அழித்து வருகிறோம்.   இப்போது நாம் வாங்கும் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய் இப்போதே பதினைந்து ரூபாய்க்கு நாம் வாங்குகிறோம் என்றால் வருங்கால சந்ததிகள் என்ன விலை கொடுத்து தண்ணீர் வாங்குவார்கள்? ஆயிரம் ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்?.  இதை எப்படி நம் வளர்ச்சி என்று சொல்ல முடியும்?,..தண்ணீர் விற்பவனுக்கு தான் லாபம்.

தற்போது ஏன் கத்திரிக்காய் தக்காளி காய்கறிகளின் விலை ஏறி உள்ளது?,.. காய்கறிகளை நீங்கள் அண்டை மாநிலங்களிடம்  இருந்து எதிர்பார்ப்பதால் தான்.  ஏன் இங்கே நீங்கள் விளைவிக்கவில்லை?என சாடினார்.

இதையும் படிக்க   | செந்தில் பாலாஜி வழக்கு; 3-வது நீதிபதியாக சி.வி. காத்திகேயன் நியமனம்!