”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கே அண்ணாமலை யாத்திரையை தொடங்கியுள்ளார்” - EVKS இளங்கோவன்

”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கே அண்ணாமலை யாத்திரையை தொடங்கியுள்ளார்” - EVKS இளங்கோவன்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கே அண்ணாமலை யாத்திரையை தொடங்கி உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் EVKS இளங்கோவன் விமர்சித்து பேசியுள்ளார். 

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அறக்கட்டளை சார்பில் பொது மருத்துவ முகாமை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  EVKS இளங்கோவன் தொடங்கி வைத்தார். 

இதையும் படிக்க : குறைந்த மேட்டூர் நீர் இருப்பு; பயிர்களுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றும் அவலம்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை பிஜேபிக்கு சாவு மணி அடிப்பதற்காகவே யாத்திரையை தொடங்கி இருப்பதாக விமர்சித்தார். 

தொடர்ந்து பேசியவர், பச்சோந்தி போல் மாறிக்கொண்டே இருக்கும் அண்ணாமலை, பாதயாத்திரை சென்று நேரத்தை வீணடிப்பதை விட குற்றாலத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் திருந்துவார் என கடுமையாக விமர்சித்து பேசினார்.