1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு... மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகு முடிவு... 

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு... மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகு முடிவு... 

சென்னை டிபிஐ வளாகத்தில், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்டர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில்  பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்  துறை சார்பாக 28 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்புக்கு ஒருவர் பொறுப்பு என்பதுபோல் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மானிய கோரிக்கையின் போது அனைத்து தரப்பினர் பாராட்டை பெற்றிருந்தாலும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால்தான் அடுத்த கூட்டத்தொடரிலும் பாரட்டை பெறமுடியும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கருத்து உள்ளது. முதலமைச்சரிடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுப்பார். 

குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டயப்படுத்தும் காலகட்டம் இதுவல்ல; குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம்.பள்ளிகள் திறந்த பிறகு இதுவரை148 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றை காட்டிலும் மிகப்பெரிய  பாதிப்பாக இருப்பது குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குழந்தைகளின் மனரீதியாக பாதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என பேசினார்.

பள்ளிகளில் இடைநிற்றல் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறிய அவர், நீட் தேர்வின் முடிவின் அடிப்படையில் பயிற்சி முறைகளை மேம்படுத்துவதா அல்லது மாணவர்களின் திறனை மேம்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.