அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் முடிவை எட்ட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

போக்குவரத்து கழக அதிகாரிகள், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அத்துறை தொடர்பான வழக்குகளில் முடிவை எட்ட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் முடிவை எட்ட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

நடராஜன் வழக்கு:

பணிக்கால மற்றும் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்கக் கோரி, விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றிய நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுப் போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவு:

தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் முடிவை எட்ட முடியாது:

போக்குவரத்து கழக அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்குகளில் முடிவை எட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த வழக்கினை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.