நித்திக்கு டஃப் கொடுக்கும் தேதஸ் சுவாமி..! வெளியான ஆடியோவால் போலிசில் சிக்கி அல்லல்..!

அமைச்சர் சேகர்பாபுவே நம் பக்கம்..!

நித்திக்கு டஃப் கொடுக்கும் தேதஸ் சுவாமி..! வெளியான ஆடியோவால் போலிசில் சிக்கி அல்லல்..!

தமிழ்நாட்டில் பிறந்து சாமியாராக வளர்ந்து மதுரை ஆதினத்தின் ஜீயராக நெருங்கிய வேளையில், வீடியோ ஒன்றால் அல்லோல் பட்டு, தேடப்படும் குற்றவாளி ஆகி, தற்போது புது நாட்டையே உருவாக்கி அனைவரும் டிமிக்கி கொடுத்து விட்டு கடவுளாகவே வாழ்ந்து வருபவர் சுவாமி நித்தியானந்தா. ஆசிரமத்திற்கு வரும் பெண்கள், சிறுமிகளை பாலியல் தொல்லை செய்வதாக வந்த புகாரின் பேரில், போலிசார் இவரை வலை வீசி தேடி வந்த நிலையில், அனைவரது கண்ணிலும் மண்ணை தூவி விட்டு ஈகுவடார் நாடருகே கைலாசா என்ற புது நாட்டையும், அதற்கென கொடி, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை உருவாக்கி அசத்தி வருகிறார் நித்தி. 

அவ்வப்போது இணையம் வழியே மட்டும் தனது பிரசங்கம் செய்து வரும் நித்தியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரது சிசியனாக தற்போது தமிழ்நாட்டில் வலம் வருபவர் தேஜஸ் சுவாமிகள், நித்திக்கே டஃப் கொடுக்கும் வகையில் தன்னை சிவனின் அவதாரம் என சொல்லி, புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்குவார் தேஜஸ். யார் இந்த தேஜஸ்..

திருச்சி  மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். தன்னை சாமியாராக அடையாளப்படுத்திக்  கொண்ட அவர் தேஜஸ் சுவாமிகள் என தனக்கு தானே பெயரிட்டுக் கொண்டார். 31 வயதாகும் தேஜஸ் கடந்த 4 வருடங்களாக சாமியாராக வலம் வருகிறார். கடந்த தேர்தலின் போது கூட தேஜஸை வேட்பாளர்கள் பலர் சந்தித்து ஆசி பெற்று சென்றனர். தனக்கு அமைச்சரோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எப்போது பீத்திக் கொண்டே இருப்பாராம் தேஜஸ். 

இந்த நிலையில், நித்தி எப்படி ஒரு வீடியோவால் மாட்டிக் கொண்டாரோ, அதேப் போல தேஜஸ் ஒரு ஆடியோவால் மாட்டிக் கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு வழக்கறிஞருடன் இவர் பேசிய ஆடியோ தான் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வழக்கறிஞரிடம், ”திருச்சியை சேர்ந்த ரவுடிகள் சிலர் வந்து சந்தித்து ஆசி பெற்று சென்றதாகவும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் நான் சைரன் வைத்த காரில் சென்று அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்ததாக இன்னொரு ஆடியோவில் கூறியிருக்கிறார்.”

ஆடியோவை கேட்ட  போலிசார் ”அப்படியா சுவாமி, சற்று காவல்நிலையம் வரை வந்து தங்களது அருள்வாக்கை சொல்லிவிட்டு போங்க என அலேக்காக அள்ளிச் சென்றனர்”அதிகாரிகள்.  ஐயா எனக்கு ஒன்றும் தெரியாது எனது விசிறிகளும், சிசியன்களும் என் மீதான அன்பில் தான் புகைப்படங்களை வெளியிட்டதாகவு, அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல எனவும் கண்ணீர் விட்டு புலம்பியதாக கூறப்படுகிறது. தன் புகழை கெடுப்பதற்காக எவனோ வேண்டுமென்றே இப்படி ஆடியோ வெளிட்டு சதி செய்வதாக சிக்கிய போலிசாரிடமே மீண்டும் புகார் தெரிவித்திருக்கிறார் தேஜஸ்.ஆக நித்தியின் கைலாசாவுக்கு டஃப் கொடுக்க மற்றொரு புதிய நாடு உருவாகிடுமோ?