இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்... 50 ஆயிரம் பேர் முன்பதிவு என தகவல்...

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்... 50 ஆயிரம் பேர் முன்பதிவு என தகவல்...

வரும் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று முதல் நாளை மறுநாள் வரை, சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகள், மற்ற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 734 பேருந்துகள்கள் என, தமிழகம் முழுதும் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, ஆறு இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எந்த ஊருக்கு செல்ல, எந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்பதை அறிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பேருந்துகளில் பயணிக்க 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவு என்றும், இன்னும் இரண்டு நாட்களில் முன்பதிவு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.