முகமது நபி குறித்து அவதூறு கருத்து.. பாஜகவினரை கண்டித்து தமுமுக கண்டன ஆர்பாட்டம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

முகமது நபி குறித்து அவதூறு கருத்து.. பாஜகவினரை கண்டித்து தமுமுக கண்டன ஆர்பாட்டம்!

முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவினரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தம்பரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்ட நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பாஜகவினர் உருவபொம்மையை எரித்து இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் இஸ்லாமியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் முகமது நபி குறித்த அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த  நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றானர்.

இதேபோல் தேனி மாவட்டம் போடி கட்டபொம்மன் சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலை  பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.