உக்ரைனில் சிக்கி கொண்ட மாணவிகளை மீட்க வேண்டும்... கோரிக்கை விடுத்துள்ள பெற்றோர்கள்!!

உக்ரைனில் சிக்கி கொண்ட மாணவிகளை மீட்க வேண்டும்... கோரிக்கை விடுத்துள்ள  பெற்றோர்கள்!!

கொடைக்கானல் மாணவி உட்பட உக்ரைன் நாட்டில் சிக்கி கொண்ட 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை மீட்க கோரிக்கை எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க துவங்கி உள்ளதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது .இதனை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த மாணவ மாணவிகள் சிக்கி தவித்து உள்ளனர். அங்கு மாட்டி கொண்ட மாணவ மாணவிகளை தொடர்பு கொள்ள முடியாமல் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொற்றோர்களிடையே பெரும் பதற்றதை ஏற்படுத்தி உள்ளது.கொடைக்கானல் மாணவிகள் உட்பட  200க்கும் மேற்பட்ட மாணவிகளை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்

இதினிடையே உக்கரைனுக்கு பணிக்காகவும், கல்விக்காகவும் சென்ற தமிழர்கள் அதிகம் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  திமுக எம்பி அப்துல்லா தெரிவித்துள்ளார்.