வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு...

நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு...

வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யக் கூடும் என்றும், கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.