உதயநிதி துணை முதலமைச்சர் ஆக வேண்டும்...எம்.எல்.ஏ. பிரபாகரன் சூசகப் பேச்சு...!

உதயநிதி துணை முதலமைச்சர் ஆக வேண்டும்...எம்.எல்.ஏ. பிரபாகரன் சூசகப் பேச்சு...!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் சட்டப் பேரவையில் சூசகமாக பேசியுள்ளார். 

சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

அப்போது, அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பலரும் பாராட்டும் வகையில் ஃபோர், சிக்ஸர் என கலக்கி வருகிறார். அவரின் உன்னதமான உழைப்பு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது என்றும், முதலமைச்சருக்கு துணை நின்று அனைத்து துறைகளிலும் சீறிய சிந்தனைகளை செயல்படுத்த வேண்டும் என்று சூசகமாக பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இவரின் மறைமுக பேச்சு திமுக எம்.எல்.ஏக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.