உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை  பூட்டி சிறை வைத்த மக்கள்: அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்...

தர்மபுரி அருகே வீட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளிப்புறமாக பூட்டி சிறை வைத்ததால் அவமானமடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை  பூட்டி சிறை வைத்த மக்கள்: அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்...

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பூதிநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவருக்கு 38வயதான ஜமுனா என்ற மனைவியும், திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் வேடியப்பன், 2 வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அனுமந்தன் என்பவருடன் ஜமுனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த வேடியப்பன் மனைவியை கண்டித்து வந்துள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இனி இருவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளக்காதல் ஜோடியினர் ரகசியமாக இரவு நேரங்களில் சந்தித்து வந்துள்ளனர்.

 இந்நிலையில் கடந்த 29ம் தேதி ஜமுனாவின் வீட்டிற்கு அனுமந்தன் வந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளிப்புறமாக கதவை பூட்டி இருவரையும் சிறை வைத்தனர்.பின்னர் இதுபற்றி பெங்களூருவில் உள்ள வேடியப்பனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அவர் வந்த பின்னர் இருவரையும் கண்டித்து அனுப்பி உள்ளனர். இதையடுத்து வேடியப்பன் மனைவியை எச்சரித்து விட்டு பெங்களூருக்கு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார். 

இதனிடையே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது பொதுமக்களிடம் சிக்கியதால் அவமானத்தில் இருந்த ஜமுனா, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவலின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜமுனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.