இருவேறு பாலியல் வழக்கு.. ஒருவருக்கு 26 ஆண்டு.. ஒருவருக்கு 7 ஆண்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இருவேறு பாலியல் வழக்குகளில் இருபத்தி ஏழு ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜபாளையத்தை அடுத்துள்ள மாலையாபுரத்தை சேர்ந்தவர் வெண்ணி என்ற அய்யனார். இவர் கிராம பஞ்சாயத்தில் குடிதண்ணீர் திறந்து விடும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2018 அன்று 13 வயது சிறுமிக்கு அய்யனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அய்யனாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்தார்.
ராஜபாளையத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிறிஸ்துராஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் ஒரு பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி
சுரேஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.