பதுக்கி வைத்த ரேஷன் அரிசி பறிமுதல்!!!

திண்டிவனம்  தனியார் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைககளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பதுக்கி வைத்த ரேஷன் அரிசி பறிமுதல்!!!

திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள  பதுக்கி வைத்திருப்பதாக ரோஷனை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்க்குச் சென்ற ரோஷனை போலிசார் அந்த தனியார் அரிசி ஆலையில் சோதனை செய்த பொழுது 78 மூட்டைகள்  ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அதனை  பறிமுதல் செய்த போலீசார் விழுப்புரம் சிவில்  சப்ளை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தவுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தனியார் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 மூட்டை ரேஷன் அரிசியை   துறை சார்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் இடபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.