தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை எதிர்த்த மனு தள்ளுபடி!

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை எதிர்த்த மனு தள்ளுபடி!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறையில் உதவி அதிகாரியாக இருக்கும் ஷாலினி அளித்த மனுவில், கடந்த 2021ம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முயன்றபோது, அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும், அந்த சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தபோது, அரசின் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், ஷாலினி மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.