நியாய விலைக்கடையில் நடந்த அக்கிரமம்... மண்ணெண்ணெயுடன் தண்ணீர் கலந்து வினியோகம்...

நாட்றம்பள்ளி அருகே நியாய விலை கடையில்  மண்ணெண்ணெயுடன்  தண்ணீர் கலந்து  வினியோகித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நியாய விலைக்கடையில் நடந்த அக்கிரமம்... மண்ணெண்ணெயுடன் தண்ணீர் கலந்து வினியோகம்...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் ஊராட்சி மன்ற பகுதியில் பச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில்  பகுதி நேர நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடையிலிருந்து அரிசி பருப்பு மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சத்யா என்ற பெண்மணிக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் நியாய விலை கடை ஊழியர்கள் வழங்கியுள்ளனர். அப்போது  மண்ணெண்ணெயில் தண்ணீர் கலந்து வினியோகம் செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சத்யா இதனை அங்கிருந்த பொதுமக்களிடம்  கூறியதை தொடர்ந்து நியாயவிலைக் கடை ஊழியர் ரேஷன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் இதேபோல் காலம் காலமாக நடக்கிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு மண்ணெண்ணெயில் தண்ணீர் கலந்து கலப்படம் செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.