"புதிய சாதிப் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம்" - கவிஞர் வைரமுத்து!

பழைய பெயர்களை அழித்துவிட வேண்டாம் என்றும், புதிதாக யாரும் சாதிப் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். 

முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முத்துராமலிங்க தேவர் தேர்தலில் பெற்ற ஒரு லட்சம் வாக்குகளில் தன் சாதி வாக்குகள் வெறும் 18 ஆயிரம் மட்டும் தான் என்று அவர் கூறியதை நினைவு கூர்ந்தார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை விட வேறு ஒரு பெயர் பொருத்தமாக இருக்காது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், பழைய பெயர்களை அழித்துவிட வேண்டாம் என்றும், புதிதாக யாரும் சாதிப் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறினார்.