கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது....தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!!

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக ஆறு வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது....தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!!

தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான  தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் நகைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளபட்டு  வருவதாகவும், தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கோவில் நகைகள் கணக்கெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடரலாம் என்றும்  உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்