99% பணிகள் நிறைவு; மீதமுள்ள 1 % பணி விரைவில் நிறைவடையும் - அமைச்சர் கே.என்.நேரு

99% பணிகள் நிறைவு; மீதமுள்ள 1 % பணி விரைவில் நிறைவடையும் - அமைச்சர் கே.என்.நேரு

தூர்வாரும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள ஒரு சதவீத பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 


கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, தூர்வாரும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள ஒரு சதவீத பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து, C மற்றும் D வாய்க்கால்களையும் தூர்வார அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  

இதையும் படிக்க : கல்லணையில் இருந்து வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறப்பு...!

மேலும், உரம், விதை மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளதாக தெரிவித்த  அமைச்சர் கே.என்.நேரு, காவேரிக்கு தேவைக்கேற்ப நீர் திறப்பு அதிகரிக்கப்படும் எனவும் கூறினார்.