போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்...! வணிகர் சங்கங்கள் பங்கேற்பு...!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்...! வணிகர் சங்கங்கள் பங்கேற்பு...!

திருப்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர் பேரவை மற்றும் வணிகர்கள் அனைவரையும் அழைத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ், சுரேஷ் பாண்டியன் மற்றும் சரவணன், காவல் ஆய்வாளர்கள், போலீசார் மற்றும் வணிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.