குடிபோதையில் காரை ஓட்டி விபத்து...செவிலியரிடம் தகராறு செய்த விசிக பிரமுகர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குடிபோதையில் காரை ஓட்டி சென்று பெட்ரோல் பங்க் மீது மோதிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து...செவிலியரிடம் தகராறு செய்த விசிக பிரமுகர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திபாவளி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர் மோகன் ராஜ் என்பவர் குடிபோதையில் தனது காரை ஓட்டி வந்து திருச்சி சாலை  பள்ளத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த பம்ப்  மீது மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளார்.

நல்லவேளையாக தீபாவளி அன்று பெட்ரோல் பங்க் முழுவதும் மூடப்பட்டிருந்தால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அதன்பிறகு விபத்தில் காயமடைந்த மோகன்ராஜ் மற்றும் காரில் இருந்தவர்கள்  அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

அப்போது செவிலியர்  வெளிக்காயம் எதுவும் இல்லை உள்காயம் ஆக இருக்கும் நீங்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரிடமுன் மரியாதையின்றி இழிவாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ தற்பொது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், காவலர்களை அவமறியாதையாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மோகன்ராஜ் மீது வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.