குடிபோதையில் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிக்கொண்ட இளைஞர்கள்...வைரலாகும் வீடியோ...!!

திருப்பூரில் நள்ளிரவில் மதுபோதையில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

குடிபோதையில் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிக்கொண்ட இளைஞர்கள்...வைரலாகும் வீடியோ...!!

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பவானி நகர் பகுதியில் நேற்று இரவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் ஆறு பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டனர்.

அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்கள் போதையில் இவர்கள் தாக்கிக்கொள்வதை கண்டு அச்சமடைந்தனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தை அவ்வழியே சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார்.

அதை பார்த்து கோபமடைந்த இளைஞர்கள் வீடியோ எடுக்க கூடாது என அவரிடம் வாதிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.