பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவு.. பள்ளி மாணவியின் கால் மீது சக்கரம் ஏறியது...சமயோஜிதமாக செயல்பட்டு மாணவியின் உயிரை காப்பாற்றிய மாணவர்!!

சென்னை அம்பத்தூரில் அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால், 7ம் வகுப்பு பள்ளி மாணவியின் கால் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவு.. பள்ளி மாணவியின் கால் மீது சக்கரம் ஏறியது...சமயோஜிதமாக செயல்பட்டு மாணவியின் உயிரை காப்பாற்றிய மாணவர்!!

அம்பத்தூர் காவல்நிலையம் எதிரே பேருந்தின் முன் படிக்கட்டு கதவை மூடும் போது, அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு  பயிலும் மாணவி வேகமாக பேருந்து படியில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் மாணவியின் வலது காலில் ஏறி இறங்கியது. இந்த விபத்தை நேரில் கண்ட 8ம் வகுப்பு மாணவர் சாரதி, சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மாணவியின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார், உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.