பள்ளியில் சீலிங்க் உடைந்து விழுந்து 1ம் வகுப்பு மாணவர்கள் படுகாயம்!!!

சென்னையில் உள்ள டிஏவி பள்ளியில் பால்சீலிங் பெயர்ந்து விழுந்த விபத்தில் 1ம் வகுப்பு படிக்கும் இரு குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

பள்ளியில் சீலிங்க் உடைந்து விழுந்து 1ம் வகுப்பு மாணவர்கள் படுகாயம்!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் மடிப்பாக்கத்தை சேர்ந்த தர்ஷன்(5), மற்றும் சகானா(6), இரு குழந்தைகளும் மதியம் உணவு இடைவேளையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது பள்ளியின் மேலே இருந்து பால்ஸ் சீலீங் திடீரென பெயர்ந்து குழந்தைகளின் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதும் உடனடியாக பள்ளி நிர்வாகம், அருகில் பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் படிக்க | போதை மாத்திரை, டானிக் விற்பனை : போலி மருந்து விற்பனையாளர்கள் கைது !!

தர்ஷனுக்கு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நிலை சீராக உள்ள நிலையில் சகானாவிற்கு பலத்த காயம் என்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியார் பள்ளிகள் பள்ளியின் தரத்தை உறுதி செய்யாமல் விட்டதே இதுபோன்ற விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி நிர்வாகத்திடமும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பெற்றோர்களிடம் இரு குழந்தைகளின் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.