சந்தோஷத்தில் ஈபிஎஸ்.. சங்கடத்தில் ஓபிஎஸ்? அதிமுக-வில் விஸ்வரூபம் எடுத்த ஒற்றை தலைமை விவகாரம்!

ஓற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களில் இருவர் தற்போது பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷத்தில் ஈபிஎஸ்.. சங்கடத்தில் ஓபிஎஸ்?  அதிமுக-வில் விஸ்வரூபம் எடுத்த ஒற்றை தலைமை விவகாரம்!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஒற்றைத்தலைமை விவகாரத்தால் அதிமுக நிர்வாகிள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சர்ச்சைகளுக்கிடையில்,  பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நிச்சயமாக நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்த 11 மாவட்ட செயலாளர்களில் தற்போது இருவர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளித்து வந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா, மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் ஆதரவை பழனிச்சாமிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கான ஆதரவு எண்ணிக்கை 9 ஆக சரிந்துள்ளது. இதனால் பழனிச்சாமி படு உற்சாகத்தில் இருக்கும் அதே வேளையில் ஆதரவு எண்ணிக்கை சரிந்து வருவதால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.