லட்சக் கணக்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்லாபாத் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூபாய் 54,81,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்களூர் ஊராட்சி கேம்லாபாதில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
முகாமில், மருத்துவ துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்ட பயிர்கள் மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சிறப்பு ஸ்டால்கள் மூலம் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கூட்டுறவு துறை வருவாய்த்துறை மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூபாய் 54 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.